Connect with us

பள்ளி விபத்து – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!

அரசியல்

பள்ளி விபத்து – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!

நெல்லையில் பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட். 

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்த மாணவர்கள் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் உரிய முறையில் செயல்படுகிறதா என்பதனை பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Continue Reading

More in அரசியல்

To Top