ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நேற்று முந்தினம்  குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று முன்தினம் குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதனுடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.

பரபரக்கும் ஜார்கண்ட் அரசியல் களம்.! ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கான தனி விமானம் ரத்து.!

இன்று 3ஆம் நாளாக வழக்கமான நிகழ்வுகளான உறுப்பினர்களின் கேள்வி, பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்டவைகளுக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ளதால், தற்போது ஆளும் பாஜக அரசின் கீழ் கூட்டப்படும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே, எதிர்கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ர்ஜுனா  கார்கே அறையில் ஆலோசனை மேற்கொண்டனர். இன்றைய கூட்டத்தில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் கைது நடவடிக்கை பற்றி விவாதம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இதனை அடுத்து இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது. தொடங்கியதும் முதல் தீர்மானமாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இருந்தே, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது குறித்து அமளியில் ஈடுபட்டனர்.

சோரன் கைது நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.  அமலாக்கத்துறையை கொண்டு எதிர்கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சியினர் பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

5 thoughts on “ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!”

  1. Hi, I do think this is a great website. I stumbledupon it 😉
    I’m going to revisit yet again since I book marked it.
    Money and freedom is the greatest way to change, may you be rich
    and continue to help other people.

  2. Howdy! I could have sworn I’ve been to this blog before but after
    browsing through some of the post I realized it’s new to me.
    Nonetheless, I’m definitely glad I found it and I’ll be book-marking and checking
    back frequently!

  3. It is perfect time to make some plans for the future and it’s time to be happy.

    I have read this post and if I may just I wish to recommend you some interesting things or suggestions.

    Perhaps you could write subsequent articles regarding this article.
    I desire to learn more things about it!

  4. Nice blog here! Also your site loads up very fast!
    What web host are you using? Can I get your affiliate link to
    your host? I wish my site loaded up as fast as yours lol

Leave a Comment