அனுமதியின்றி அரசு நிலத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கார் சிலை அகற்றம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்று அரசு நிலத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அம்பேத்காரின் சிலை அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி எனும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் அனுமதியின்றி அம்பேத்காரின் சிலையை நிறியதற்காக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலையும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூடி தான் 4 பாடியுள்ள இந்த அம்பேத்காரின் சிலையை நிறுவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிலை நிறுவப்பட்ட அன்றே அவ்விடத்தில் காவலுக்கு நின்ற நான்கு பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்பதாக காலை போராட்டத்தில் ஈடுபட்ட பீம் இராணுவ மாவட்ட பிரிவின் தலைவர் சகோப் சவுராப் மற்றும் செயலாளர் வினோத் கவுதம் உட்பட 20 பேர் மறுநாள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளதால், வேறேதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

author avatar
Rebekal