மாநிலங்களவை தேர்தல் : அன்புமணி ராமதாஸ் இன்று வேட்பு மனு தாக்கல்

பாமக மாநிலங்களவை வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இன்று   வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக விற்கு வழங்கப்பட்டது.

இதனால் பாமக சார்பாக மாநிலங்களவை வேட்பாளராக  அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார்.இதனையடுத்து  அன்புமணி ராமதாஸ் இன்று  வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.