ஒற்றுமை யாத்திரை : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.!

டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ராஜீவ் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

டெல்லியில் அவர் பாரத தலைவர்களது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதே போல, மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நினைவிடத்திற்கும் சென்று ராகுல்காந்தி, மலர்தூவி தனது மரியாதையை செலுத்தினார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment