சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் கசிவு! வெளியான தகவல்.!

சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்.

40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை சொந்தமாக வைத்திருப்பதாக ஹேக்கர், ஒருவர் கூறியுள்ளார், மேலும் அதனை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளார். உயர் பதவிகளில் இருக்கும் மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனத்தின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை, சல்மான் கான் ஆகிய இரண்டு முக்கிய நபர்களின் தகவல்களை மாதிரிகளாக வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் ஹேக்கர், இந்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு நீங்களே இந்த 40 கோடி தரவுகளையும் வாங்கிக்கொள்ளுமாறு தனது பதிவில் மஸ்க்கிடம் கேட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment