திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி – மு.க.ஸ்டாலின்

ராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்று ராஜேந்திரபாலாஜி உளறிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஜெயித்தால் பாஜக ஜெயித்ததாக தான் அர்த்தம். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜியை விரட்டியது போல, ராஜபாளையத்தில் இருந்தும் விரட்ட வேண்டும். இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவாகியுள்ள நிலையில், இதுகுறித்த உண்மையை கண்டுபிடித்து,  ராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.