கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு ! இன்று விசாரணை

கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்தது தொடர்பான விசாரணை  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பின் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற  தமிழிசை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கில்  தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலாக வழக்கை நடத்த அனுமதி கோரி வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்தார் .இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீதான  விசாரணை    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.