தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்…! டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வு …!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கணித தேர்வை மீண்டும் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.டிசம்பர் 3 ஆம் தேதி  முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது .
Image result for அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
இந்நிலையில் தற்போது வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வு ரத்து செய்துள்ளது.  தேர்வு மீண்டும் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மரைன் பொறியியல் மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வை எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Comment