விரைவில் பிரணாப் முகர்ஜி நலம் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அதே சமயம்அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது முன்னாள் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் தன்னுடன் அருகிலிருந்தவர்களையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal