கேரள விமான விபத்து : மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும்! – சுகாதாரத்துறை அதிகாரிகள்

மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும்.

கேரளாவில், கோழிக்கூடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், தானாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.