பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி பிரபாஸ் ரசிகர் ஒருவர் பலி!

நடிகர் பிரபாஸ், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகி உள்ள சாஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பின், பிரபாஸின் இப்படம் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிராபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது, மின்சார ஒயர் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் திரையரங்கு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.