திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், தற்போது வரும் 28-ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முறை மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 நபர்கள் மட்டும் பணி புரியும் வகையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரனோ பரிசோதனையை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்புக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan