#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு….!11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை..

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனினும்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.மாறாக,ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்கள்:

கோயம்புத்தூர்,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.