திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் கே.பி.ராமலிங்கம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுத்துகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு பணிகளில் அரசியல் பாகுபாடின்றி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

இதனை அடுத்து, கே.பி.ராமலிங்கம் திமுகவில் வகித்து வந்த விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக  திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பாக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக (சஸ்பெண்ட் ) திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இந்நிலையில்  கே.பி.ராமலிங்கத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.