தனிமைப்படுத்தப்பட்டு இருந்த புதுமாப்பிள்ளை தற்கொலை.!

இந்தியாவில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆஷு ( 21). இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஆஷு சண்டிகாரில் வேலை செய்து வந்த வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதனால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆஷு நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
murugan