சொன்னதை நிகழ்த்திக்காட்டிய ஹெச்.ராஜா!உடைக்கப்பட்டது பெரியார் சிலை …..

வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் தாலுகா அலுவலகம்  முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்த பெரியார் சிலையை பாஜகவை சேர்ந்த முத்துராமன் பிரான்சிஸ் ஆகியோர் சிலை சேதப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் இவர்கள் இருவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.இந்த கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலைதான் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் தற்போது அவர் கூறியதுபோல் பெரியார் சிலை பாஜகவின் உறுப்பினர்களாலே உடைக்கபட்டுள்ளது.

இதனால்  ஈரோடு,திருச்சியில்  உள்ள பெரியார் இல்லம் மற்றும் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment