திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும்-கமல்ஹாசன்

  • குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறும் என்று திமுக அறிவித்தது. 
  • திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதவை கொண்டு வந்த நிலையில் இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் பின்பு ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் , குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குக் கமலுக்கும் அழைப்பு விடப்படும் .திமுகவின் கூட்டம் குறித்து கமல்ஹாசன் என்னிடம் பேசினார். அவரிடம் நான் குடியுரிமை சட்டம் குறித்து விவாதித்தேன் என்று தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகத்தில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அவை மாற்றப்பட வேண்டும்.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் தன் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்தார்.