ஆசிய கோப்பை : ஆப்கன் – பாகிஸ்தான் வீரர்கள் மோதல்.! ரசிகர்கள் ஆத்திரம்.! ரணகளமான கிரிக்கெட் போட்டி.!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.  

ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி வரை கடுமையாக போராடியது. அப்போது 19வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, ஆப்கன் வீரர் பரீத் அகமது வீசிய 4வது பந்தில்  சிக்ஸர் அடித்து விடுவார்.

அதற்கு அடுத்த பந்தில் அவுட் ஆகி விடுவார். அந்த சமயம் பரீத் அகமது எதோ சொல்ல , கோபமடைந்த ஆசிப் அலி பேட்டால் பரீத் அகமதை தாக்க முற்பட்டு விடுவார். மற்ற சக வீரர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி ஆசிப் அலியை பெவிலியன் செல்ல அனுப்பி விடுவர்.

இறுதியில் 20 ஓவரில் 2 சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. இதனால் மைதானத்தில் கடுப்பான ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகளை அடித்து உடைத்துவிட்டனர். இதனால் நேற்றைய ஆட்டத்தில் மைதானமே ரணகளமாக மாற்றிவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment