ஹைதராபாத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை!!!

ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், எல்பி நகர், யூசுப்குடா, அமீர்பேட்டை, மல்காஜ்கிரி, மாதப்பூர், மியாபூர், செரிலிங்கம்பள்ளி, சாந்தாநகர், கச்சிபௌலி, பேகம்பேட்டை, செகந்திராபாத், அல்வால், குதுபுல்லாபூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வரும் சனிக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment