வி.கே.பார்த்தசாரதியை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை..!

பொள்ளாச்சி வி.கே.பார்த்தசாரதியை அதிமுக கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டனர்.

முதல்வர், துணைமுதல்வர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கலகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கலகத்திற்கு களங்கமும் அவபெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தை சார்ந்த பொள்ளாச்சி வி.கே.பார்த்தசாரதி (தலைமை கழகப் பேச்சாளர், மகாலிங்கபுரம் பொள்ளாச்சி)

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்க வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இருவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan