ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை …!

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளனர். 

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பின்னதாக டிசம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து  இருவரும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

author avatar
Rebekal