இனி ஒட்டக பாளுல தா டீ போடணும்!

அமுல் பால் நிறுவனம் குஜராத் மாநிலத்தை தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது. அமுல் நிறுவனம் பால் சம்மந்தமான பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அமுல் நிறுவனம் வடிக்கையாளர்கள் கவரும் விதமாக புதிய பொருள்களை அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது அமுல் நிறுவனம் ஒட்டக பாலை  200 மில்லி பாட்டிலில் விற்க முடிவு செய்து உள்ளது.இது குறித்து அந்நிறுவன இயக்குனர் ஜோதி கூறுகையில் , இன்னும் சில வாரங்களில் இந்திய முழுவதும் அமுல் நிறுவனம் ஒட்டக பாலை 200 மில்லி பாட்டிலில் விற்க உள்ளோம்.

அந்த பாலின் விலை ரூ.25 என கூறினார்.அதற்கான ஏற்பாடுகள் காந்தி நகரில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனேவே அமுல் நிறுவனம்  ஜனவரி மாதத்தில் 500 மில்லி லிட்டர் ஒட்டக பாலை அறிமுகப்படுத்தியது.அதன் விலை ரூ.50 என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan