அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை…!வெற்றிவேல்

அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்று  தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக   தினகரன் அணியின் வெற்றிவேல் கூறுகையில்,  டிடிவி தினகரனை ஒபிஎஸ்-ன் தம்பி நேரில் சந்தித்தது உண்மைதான்.இதை டிடிவி தினகரனே கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை என்றும்  தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment