நித்யா மேனன் – ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை…ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படக்குழு.!

ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதனை தொடந்து இந்த ஆண்டு, அவரது நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

தற்பொழுது, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் படத்திற்கு நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

போஸ்டரில் ஜெயம் ரவி – நித்யா மேனன் காதல் ஜோடிகளாக நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர்.  இந்த போஸ்டரில் சுவாரசியம் என்னவென்றால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், நடிகை நித்யா மேனன் பெயரை முதலில் போடப்பட்டு, இரண்டாவதாக ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு காரணம் நடிகர் ஜெயம் ரவி ஈகோ இல்லாத நடிகர் என்றே சொல்லலாம். மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பெண்ணை மையமாக வைத்து கூட அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.