” உள்ளேன் ஐயா ” சொல்ல கூடாது…இனி மேல் ” ஜெய் ஹிந்து , ஜெய் பாரத்”-தான் குஜராத் பள்ளிகளில் புதிய விதி…!!

குஜராத் பள்ளிகளில் வருகை பதிவிட்டேன் போது உள்ளேன் ஐயாவிற்கு பதில்  ஜெய் ஹிந்து , ஜெய் பாரத் கூற வேண்டுமென்ற புதிய உத்தரவிட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் வருகை பதிவேட்டில் “உள்ளேன் ஐயா” என்று கூறாமல் அதற்க்கு பதில் ஜெய்ஹிந்து , ஜெய் பாரத் என்று கூற வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஆண்டு முதல்அனைத்து பள்ளிகளும் இந்த விதியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் , அரசின் இந்த உத்தரவுக்கு பெரும் சர்சை ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment