இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து முதலவர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

இன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை! உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.