நாங்குநேரி : கொட்டும் மழையிலும் வாக்கு பதிவு செய்யும் பொதுமக்கள் !

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் இன்று (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர்.


கடந்த 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று நங்களது வேட்பாளர்களை அதரித்து வந்தனர்.
தற்போது அனைத்து தொகுதியிலும் வாக்குபதிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் பல அரசியல் தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், நாங்குநேரி தொதுதியில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மைரங்களுக்கு வந்தவனம் உள்ளனர்.
 

author avatar
Vidhusan