தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார்- ப.சிதம்பரம்

அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது என்ற கூற்றின் சாட்சி பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு  ஆகும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

7-ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த வேளையில் பிரதமர் நரேந்திர  மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தனர்.ஆனால் பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுதான் .

டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு பற்றி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார் .அவர் பதிவிட்ட பதிவில்,அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது என்ற கூற்றின் சாட்சி பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு  ஆகும்.தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாதகமானால் அமித்ஷாவை காரணம் காட்டவே மோடி செய்தியாளர்களை சந்தித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment