அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சி-அமைச்சர் வேலுமணி

அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வருங்காலங்களில் 100% தேர்ச்சி சதவீதம் கொண்டுவர வேண்டும் .

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.