மேகதாது அணை விவகாரம் : தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் – ஜெயக்குமார்

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து, தமிழக அனைத்துக் கட்சிக் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று பிற்பகல் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேசவுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும்  என்றும், தமிழ்நாட்டிற்கே வெற்றி கிடைக்கும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.