வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகள்..!ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை..!

ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில்  சட்ட மன்ற உறுப்பினர்  கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சிவசேரி சோமா ஆகியோர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆந்திர விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆவார்.இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.இதற்கு முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் .இந்நிலையில் இவர் அரக்கு தொகுதியில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமாவுடன் சென்றுள்ளார்.அப்போது தும்பரிகூட மண்டல் என்ற இடத்தில்   மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார்.அதேபோல்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா சுட்டுக்கொள்ள்ளப்படடார்.மேலும் உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Comment