மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேனர்களை தற்காலிகமாக அகற்ற காவல்துறையினர் உத்தரவு!

காவல்துறையினர்  ஈரோட்டில் அதிமுக கூட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேனர்களை தற்காலிகமாக அகற்ற உத்தரவிட்டதை அடுத்து அவை அகற்றப்பட்டன.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஈரோடு வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக வீரப்பன்சத்திரம் பகுதியில் சிறியது முதல் பெரியது வரை ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதே பகுதியில் மாலை அதிமுகவின் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்தின் பேனர்களை தற்காலிகமாக அகற்றுமாறு காவல்துறை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கட்சியின் நிர்வாகிகள் வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள பேனர்களை மட்டும் அகற்றினர். அதிமுக கூட்டம் நிறைவடைந்ததும் மீண்டும் அந்த பேனர்களை வைத்துக் கொள்ள காவல்துறையினர் அனுமதித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment