மாணவர்கள் போராட்டம் எதிரொலி! தொடர் விடுமுறை அறிவித்த சென்னை பல்கலைக்கழகம்!

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை உண்டானதை அடுத்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. 
  • இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது. ஏற்பட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த மாணவர் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் எதிரொலித்தது. தமிழகத்திலும் அநேக இடங்களில் மாணவர்கள் போராட்டம் ரயில் மறியல் என ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை முதல் 23 வரை விடுமுறை என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், 24ஆம் தேதி முதல், ஜனவரி 1ஆம் தேதி வரை கிருத்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.