துணைவேந்தர் நியமன விவகாரம்.! தனது தேடுதல் குழுவை ‘வாபஸ்’ பெற்றார் ஆளுநர் ரவி.! 

Tamilnadu Governor RN Ravi

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். துணை வேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகளையும் ஆளுநர் தான் தேர்வு செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை), கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்.. முதலமைச்சர் அறிவிப்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வழக்கமாக, ஆளுநர் தரப்பில் இருந்து ஒரு நபரும், மாநில அரசு … Read more

6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி.!

6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியராக உள்ள சௌந்தரராஜன். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பேராசிரியர் சௌந்தரராஜன் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பேராசிரியர் வெளியிடவில்லை எனவும் வாய்மொழியாக தெரிவித்ததாக குற்றச்சாட்டினர். இதனால், தனது மதிப்பெண்ணை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்  மாணவி ஒருவர் கேட்டுள்ளார். அப்போது பேராசிரியர் தன்னிடம் பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டார் … Read more

சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியீடு.!

சென்னை பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இளங்கலை 2வது மற்றும் 4வது செமஸ்டர் முதுகலை 3வது செமஸ்டர் முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், எம்சிஏ 3வது மற்றும் 4வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை பல்கலைக் … Read more

இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் விண்ணப்பிக்கலாம்-சென்னை பல்கலைக்கழகம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சேர ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் கல்லூரியில் … Read more

மாணவர்கள் போராட்டம் எதிரொலி! தொடர் விடுமுறை அறிவித்த சென்னை பல்கலைக்கழகம்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை உண்டானதை அடுத்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது. ஏற்பட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். … Read more

கனமழை எதிரொலி! பள்ளிகளுக்கு விடுமுறை! பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சில முக்கிய பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகல்லூரிகளுக்கு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. முதலில் சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் கனமழை காரணமாக இன்று ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக வேலூரை மையமாகக் கொண்டு இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் நடக்கவுள்ள இன்றைய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல, இன்று அதிகாலை முதல் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், … Read more