தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்க குட்டிகளுக்கு பிரதீப், தட்சிணா, நிரஞ்சனா என பெயர் சூட்டினார் முதலமைச்சர் பழனிசாமி .மேலும் பூங்காவில் உள்ள புலி குட்டிகளுக்கு வெண்மதி, யுகா, மித்ரன், ரித்விக் என பெயர் சூட்டினார்.

இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிகவாக்குகள் பெற்றுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறிவந்த நிலையில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது.

சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மதம் ஜாதி அடிப்படையில் ஆட்சி செய்யவில்லை.தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக போட்டியிடும்.

கிருஷ்ணா நதியில் 8 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இசைவு தெரிவித்துள்ளார்.தமிழக மக்கள் சார்பில் ஆந்திர முதல்வருக்கு நன்றி  என்று தெரிவித்தார்.