ஹஜ் பயணம் கூடுதல் இடம் கேட்டு பிரதமருக்கு கடிதம்…..!!

ஒவ்வொரு ஆண்டும் புனிதப்பயணமாக ஹஜ் பயணம் நடைபெறுவதுண்டு.அந்த வகையில் தமிழகத்திற்கான ஹஜ் பயண இட ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 2019 ஆம் ஆண்டு நடைபெறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இதுவரை  6379 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுமார் 3534 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர்  தமிழக்த்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள  கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment