காவிரி போராட்ட எதிரொலி…!!! தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைப்பு…!!!

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட நடிகர்-நடிகைகள்,எதிர்கட்சி என பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் சாலை மறியல், கண்டன போராட்டங்கள் நடந்தன.இந்த நிலையில், தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனை சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.  அவை பாதுகாப்பினை கருதி புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment