கன்னியாகுமரி பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை!

பல பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல்,மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

குமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டத்தின் காரணமாக வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment