ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!ஜியோ நெட்வொர்க் தொடங்க இவங்க தான் காரணமாம் அம்பானி தகவல் …

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி , ஜியோ செல்போன் நெட்வொர்க் தொடங்குவதற்கான யோசனை தனது மகள் இஷாவிடமிருந்து கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற விருதுநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அம்பானி, தனது மகள் இஷா யேல் பல்கலைக் கழக பாடங்களை முடிப்பதற்காக இணையசேவை மெதுவாக இருப்பதாக வருத்தப்பட்டதாகவும், அப்போது தனது மகனான ஆகாஷ் அம்பானி புதிய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதாக கூறியதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் நிறுவனங்களால் செயற்கையாக இணைய சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை உணர்ந்ததால் அதற்கு மாற்றாக ஜியோ சேவையை கட்டமைத்ததாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment