மக்களுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா- முதலமைச்சர் பழனிச்சாமி

  • ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து தொடர்பாக ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.
  • வாழ்நாள் முழுக்க மக்களுக்காக வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அம்மா பேரவை மாநில செயலாளர் உதயகுமார் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து தொடர்பாக ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.அப்பொழுது முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், மக்களுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை அரசு செய்து வருகிறது. ஆனால் கிராமம் முதல் நகரங்கள் வரை நாம் போட்ட திட்டங்கள் முழுமையாகபோய் சேரவில்லை. நாம் போட்ட திட்டங்கள் மக்களுக்கு புரியவைக்க அனைவரும் உதவ வேண்டும்.

அதிமுக அம்மா பேரவையில் நான் இருக்கும்போதும் சரி,தற்போதும் தன்னலமற்று உழைத்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். தன் வாழ்நாள் முழுக்க மக்களுக்காக வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா .அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை எழுச்சியோடுகொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்பு ஜெயலலிதா அவர்கள் சொன்னதைபோல ஏழை எளியவர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும். ஒரு அதிமுக நிர்வாகிகளும் தங்களால் இயன்றதை ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பேசினார்.