மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு நிறைவு…! எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை…!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல்.

சென்னை, நீலாங்கரையில் உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு திமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சோதனை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மேலும் வீட்டு செலவிற்காக வைத்திருந்த ரூ.1.36 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்ததால், அந்த பணத்தையும் வருமான வரித்துறையினர்  விட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.