IPL 2018:கெயிலின் ஆபார ஆட்டத்தில் வெற்றியை கைப்பற்றியது கிங்க்ஸ் அணி ..!

இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில்    வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .

முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் களம்  இறங்கினர்.

ராகுல் மற்றும் அகர்வால் 18 ரன்களிலும் ,நாயர் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

ஆட்டத்தின் தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் இந்த சீசனில் 104 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தி முதலாவது செஞ்சுரியை பதிவு செய்தார் .

அடுத்து 194 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

அணியின் தொடக்க வீரர்களாக சஹாமற்றும் தவான் களம் இறங்கினார்கள்.

தவான் காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார்.

கேப்டன் வில்லியம்சன் 54 ரன்களிலும் ,பதான் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பாண்டே 57 ரன்களை குவித்து ஆட்டமிழக்கவில்லை.

20 ஓவர் முடிவில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைபற்றியது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment