ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு…ப.சிதம்பரம் ஆஜர்…!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இந்த காலகட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ப.சிதம்பரம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு நிலையில் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.இதே வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஆஜராகியது   குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment