காஷ்மீரில் தாக்குதல் நடத்த டிசம்பர் மதமே நுழைந்த பயங்கரதவாதிகள்…..உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…!!

  • காஷ்மீரில் துணை ராணுவபடை வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம்.
  • ஜெய்ஷ்-இ-முகமது_வின் பயங்கரவாதிகள் குழு கடந்த டிசம்பர் மாதமே நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 21 பேர் ஜெய்ஷ்-இ-முகமது குழு கடந்த டிசம்பர் மாதமே காஷ்மீரில் நுழைந்ததாக உளவுத்துறை தெரிவித்து இருக்கிறது.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவர் முகமது மசூது அன்சாரின் உறவினரான முகமது உமர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் முகமது உமர் கொல்லப்பட்டதற்கும் , அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கும் பழிவாங்கும் வகையில் தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதற்கு கமரான் தலைமையில் இந்த குழுவினர் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இவர்கள் ஜம்மு உள்ளிட்ட இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment