2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. என சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார்.
இன்று பிரதமர் மோடி , மத்திய வேலைவாய்ப்பு மூலம் பணியில் சேர்ந்த 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினார்.
பணி நியமன ஆணைகளை வழங்கி பின்னர் அவர் பேசுகையில், ‘ வரும் 2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. அதற்கு நாம் அனைவரும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். ப்ரதமரின் கனவு நோக்கி நாம் நகர்ந்து செல்வோம். எனவும் அதில் குறிப்பிட்டு பேசினார் இணையமைச்சர் எல்.முருகன்.