தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும்..! இபிஎஸ்-க்கு சவால் விட்ட ஓபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம் என சவால் விட்ட ஓபிஎஸ்.

சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். கட்சியின் சட்டவிதிகளை ஜெயலலிதா முறையாக பின்பற்றினார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை மாற்றிவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி டம்மி என்பதால் தான் அதனை வேண்டாம் என கூறினேன்.  சர்வதிகாரத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு கட்சியை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த பழனிசாமியை நாடு மன்னிக்காது. எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம். கட்சியை  கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment