பிஜேபி MLA_வின் தலையை வெட்டினால் ரூ 50,00, 000 பரிசு…!!

உத்திரபிரதேச மாநிலத்தின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் .இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை கடுமையக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்தார்.

மாயாவதி அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்று தன்னுடைய சுய மரியாதையை விற்பனை செய்ய துணிந்து விட்டார்.மாயாவதியை பார்த்தால் ஆண் போலவும் தெரியாது, பெண் போலவும் தெரியாது.அவர் மூன்றாம் பாலினத்தவர் போல் இருப்பார் என்று கடுமையாக விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ சாதனா சிங்_க்கிற்கு கடும் எதிர்ப்பும் , விமர்சனமும் கிளம்பியது. இந்நிலையில் அவரின் இந்த மோசமான பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் அவர் வாய் தவறி தெரியாமல் பேசிவிட்டேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜய் யாதவ் இது குறித்து தெரிவிக்கையில் மாயாவதியை பற்றி கீழ்த்தனமாக பேசிய பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் மாயாவதியிடமும் , நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் எம்.எல்.ஏ சாதனா_வின் தலையை கொண்டு வருபவர்களுக்கு எங்கள் கட்சி சார்பில் 50 லட்சம் நன்கொடை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment