நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன்-கராத்தே தியாகராஜன்

சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் ப.சிதம்பரத்தை ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன்  சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,
எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் .தனிப்பட்ட முறையில் என்னை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் கே.எஸ்.அழகிரி.நான் என்றும் காங்கிரஸ், ராகுல் காந்தி விசுவாசி.நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன். ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று  கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.