புனேவில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 15 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து  கனமழை பெய்து வந்த காரணத்தால் அங்கு உள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மும்பை மற்றும் புனே பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்து வருவதால் புனேவின் உள்ள கொந்த்வா என்ற  இடத்தில்  உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.இந்த சுவர் சுமார் 60 அடி நீளமுள்ளது ஆகும்.

இந்த இடிபாடுகளில் 15 பேர் உடல் நசுங்கி உயிரிந்துள்ளனர்.மேலும்  பல கார்களும் சேதமடைந்துள்ளது. பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.